பாவம் மனசு
நொந்து வெந்துபோகிறது.
காய்த்து
தொங்கும்
வலித்திரள்களினூடு
விஷப்புழுக்கள்
தின்று கொழுத்து
உந்தி எழும்.
பாவம் உயிர்
உறிஞ்ச உறிஞ்ச
திமிறித் திமிறி விழும்.
கல்லின்மேல்
முள்ளின்மேல்
போதியும்
ஆக்கிய அச்சுக்குள் அகப்படுகிறது
புரியேறாமல்.
கரி பிரட்டி
முகம் திருத்தும் காதல்.
ஆயுள் சுருட்டி எடுத்துக்கொண்ட
காலம் சொல்லிக்கொண்டு செல்கிறது
"முதல் சாவுமணி
ஓர் கொலுசுமணி"