Thursday, December 22, 2011

பிந்திய கனவு



எங்கேயோ
விட்டுவிட்டு வந்த
கவிதை ஒன்றை
நான் எழுதிக்கொண்டிருக்கின்றேன்

நினைவை
கடந்து கடந்துபோய்
அதன் பொருளை
தேடிக் கண்டுபிடிக்கும்போது
வார்த்தைகள்
வேறெங்கோ பேசிக்கொண்டிருந்தன

இப்போதிருந்தே
ஆரம்பிக்கலாம் என்று
சொற்களை எடுத்தால்
அவை பொருள் மறந்துபோயிருந்தன

இப்படி
சொற்களுமில்லாமல் பொருளுமில்லாமல்
கவிதையொன்றை
எழுதிக்கொண்டிருக்கிறேன் நான்

2 comments:

Yaathoramani.blogspot.com said...

கருவும் வார்த்தைகளும் ஆடும்
கண்ணாமூச்சி ஆட்டத்தை மிக அழகாகச்
சொல்லிப் போகும் அழகிய சொற்களும்
அற்புதமான பொருளும் கொண்ட கவிதை
அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

ப. அருள்நேசன் said...

வாருங்கள் புதிய நண்பரே (Ramani)
மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்

- ப. அருள்நேசன்