Tuesday, February 5, 2008

அடையாளங்கள்

மனசொளி மட்டும்
மீதமிருக்கிறது
எனது அடையாளங்களை
தேடிக்கொண்டிருக்கிறேன் நான்
இருளின் பாளங்கள்
இடிந்து இடிந்து
அவ்வப்போது
கண்களை மூடிக்கொள்ளும்
எப்படியோ
மங்கலான ஒளி
என்னுள் இருந்தே
கசிந்து கொண்டிருக்கிறது
சந்தோசமாகவே
நானும் வலிகளும்...
எனது இருத்லை
உறுதிப்படுத்தும்
வலிகளின் நீட்சியை
உணர்கிறேன்
இப்படியே
எனது பயணத்தொலைவு
தொடர்கிறது
ஆனாலும் கடந்துவிட
என் பாதைகளை
காற்றும் நீருமாக சேர்ந்து
அழித்து வருகிறது
என்னோடு கூடவே
இப்படியாக
காயங்களில்லாமலே
வலிகளும்....
பாதைகளே இல்லாமல்
பயணமும்....
எனது இருத்தலை
சந்தேகித்து
பொய்யாக்கி
புறந்தள்ளத் தயாராய்
என் சுற்றம்
ஆனாலும் விடாது தேடுகிறேன்
அடையாளங்களையும்
ஆதாரங்களையும்
என் வாழ்வையும்
இருத்தலையும்
உறுதிப்படுத்திவிடலாம் என்று....


[தினகுரல் பிரசுரம ]

No comments: