Tuesday, February 5, 2008

சுதந்திரப் பறவைகள்

சிதைந்து போன
நகரத்தின் சில்லில்
ஒட்டிக்கொண்டு உயிர் வாழ்கிறது
ஓர் இனத்தின்
எஞ்சிய விதைகள்.
ஆழ்கூறுகளும் பிடுங்கப்பட்டுவிட்டதால்
அதன் கோலங்கள்
கிறுக்கல்களாய் குமைந்து கிடக்கின்றன.
அவர்களின்
வாழ்வில் பாடலை
பறித்துக்கொண்டும்
சுரங்களை சப்பிக்கொண்டும்
வானமதிரக் கத்திக்கொண்டு இருக்கின்றன
களுகுகள்
ஆயானால் சபிக்கப்பட்டு
சாத்தான்களால் அர்ச்சிக்கப்பட்ட
இரத்தமும் சதையுமான
அதே பூமியில் - இன்னும்
நினைவுகள் கனவுகளால் ஆன
சிறகுகளில் மிதந்து கொண்டிருக்கின்றன - கூடுகள்
பறிபோன அவ்வூரின்
சுதந்திரப் பறவைகள்
ஏன்றைக்கோ ஒர் நாள்
வாழ்வு மீட்கப்படாதோ
என்ற ஆதங்கத்தோடு...…


[ தினக்குரல் பிரசுரம் ]

1 comment: