Sunday, March 8, 2009

சாக்கடையில் மிதக்கும் புன்னகை


அசுத்தமாகிவிட்டது
எனது பேனா
என் இனிய மனிதர்களை
பிரிந்து பிரிந்து
பிழந்துகொண்டு பாய்ந்த
அத்தனை பரிவும்
தீர்ந்தபின்
பொய்யெழுதி வடிகிற
வார்த்தைகளின் வாடைகளோடு
சமரசம் செய்துகொண்டிருக்கிறது
என் பேனா
புத்தகத் தாழ்களுக்குள்
ஒழித்துவைத்த
பிரியங்களையும் துயரங்களையும்
எரியூட்டி
சாக்கடை கால்வாயில்
கரைத்துவிட்டு
பெருமூச்செறிகிற வேளையிலும்
இருதயத்தில்
அறைந்துகொண்டிருக்கிற அந்த
உணர்வினெச்சத்தை இன்னும்
நிறுத்தமுடியவில்லை

வீதியில் இறங்கும்போது
ஏற்றிய
நறுமணம் வீசும் ஒரு புன்னகை
வீடு திரும்பி
கழற்றி மாட்டுகையில்
பலமாகச் சிரிக்கிறது
புறங்கையில் நனைகிற
ஒரு துளி
கண்ணீரைப் பார்த்து

7 comments:

நட்புடன் ஜமால் said...

\பிரியங்களையும் துயரங்களையும்
எரியூட்டி
சாக்கடை கால்வாயில்
கரைத்துவிட்டு
பெருமூச்செறிகிற வேளையிலும்
இருதயத்தில்
அறைந்துகொண்டிருக்கிற அந்த
உணர்வினெச்சத்தை இன்னும்
நிறுத்தமுடியவில்லை\\

மிக அழகாக
உணர்வுகளை சொல்லியிருக்கின்றீர்கள்

Anonymous said...

வீதியில் இறங்கும்போது
ஏற்றிய
நறுமணம் வீசும் ஒரு புன்னகை
வீடு திரும்பி
கழற்றி மாட்டுகையில்
பலமாகச் சிரிக்கிறது
///
வார்தைகளை நன்றாகவே பயன்படுத்துகிறீர்கள்

Anonymous said...

உங்களையும் ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருகிறேன்,எனது பதிவினை பார்கவும்.முடிந்தால் எழுதுமாறும்,முடியாவிட்டாலும் எழுதுமாறும் உரிமையுடன் அழைக்கிறேன்

நண்பன் கவின்

கார்த்திகைப் பாண்டியன் said...

//வீதியில் இறங்கும்போது
ஏற்றிய
நறுமணம் வீசும் ஒரு புன்னகை
வீடு திரும்பி
கழற்றி மாட்டுகையில்
பலமாகச் சிரிக்கிறது
புறங்கையில் நனைகிற
ஒரு துளி
கண்ணீரைப் பார்த்து//

நாம் எல்லாருமே இன்று ஒரு முகமூடியுடன் தானே நண்பா வாழ்ந்து வருகிறோம்.. நல்ல பதிவு..

ப. அருள்நேசன் said...

நண்பரே ஜமால்,

//மிக அழகாக
உணர்வுகளை சொல்லியிருக்கின்றீர்கள்//

இதில், வளமைபோல நமது வலிகளை விட்டு, சமூகத்தையும் உலகத்தையும் பற்றி சொல்கிறது கவிதை, எங்கு மனிதன் நின்மதியாகவிருக்கிறான் பாருங்கள்

ப. அருள்நேசன் said...

கவின்,

//வார்தைகளை நன்றாகவே பயன்படுத்துகிறீர்கள்//

என்னசெய்வது கவின், மக்குகளுக்கு அது புரியுதில்லையே ( பெண்களை சொன்னோம்)

உங்களையும் ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருகிறேன்,எனது பதிவினை பார்கவும்.முடிந்தால் எழுதுமாறும்,முடியாவிட்டாலும் எழுதுமாறும் உரிமையுடன் அழைக்கிறேன்

அப்படி என்கிறீங்க பாத்திரலாம்

ப. அருள்நேசன் said...

வாங்க "கார்த்திகைப் பாண்டியன்",

//நாம் எல்லாருமே இன்று ஒரு முகமூடியுடன் தானே நண்பா வாழ்ந்து வருகிறோம்.. நல்ல பதிவு..//

பின்னூட்டத்தின் தன்மையிலிருந்து புரிகிறது, ஜதார்த்த நோக்குடையவர் நீங்கள் என்று, இன்று கவிதைகளை புரிந்துகொள்பவர்கள் எததனைபேர் என்பது கேழ்விக்குறிதான்

நன்றி நண்பரே,