Tuesday, February 5, 2008

சுதந்திரப் பறவைகள்

சிதைந்து போன
நகரத்தின் சில்லில்
ஒட்டிக்கொண்டு உயிர் வாழ்கிறது
ஓர் இனத்தின்
எஞ்சிய விதைகள்.
ஆழ்கூறுகளும் பிடுங்கப்பட்டுவிட்டதால்
அதன் கோலங்கள்
கிறுக்கல்களாய் குமைந்து கிடக்கின்றன.
அவர்களின்
வாழ்வில் பாடலை
பறித்துக்கொண்டும்
சுரங்களை சப்பிக்கொண்டும்
வானமதிரக் கத்திக்கொண்டு இருக்கின்றன
களுகுகள்
ஆயானால் சபிக்கப்பட்டு
சாத்தான்களால் அர்ச்சிக்கப்பட்ட
இரத்தமும் சதையுமான
அதே பூமியில் - இன்னும்
நினைவுகள் கனவுகளால் ஆன
சிறகுகளில் மிதந்து கொண்டிருக்கின்றன - கூடுகள்
பறிபோன அவ்வூரின்
சுதந்திரப் பறவைகள்
ஏன்றைக்கோ ஒர் நாள்
வாழ்வு மீட்கப்படாதோ
என்ற ஆதங்கத்தோடு...…


[ தினக்குரல் பிரசுரம் ]

அடையாளங்கள்

மனசொளி மட்டும்
மீதமிருக்கிறது
எனது அடையாளங்களை
தேடிக்கொண்டிருக்கிறேன் நான்
இருளின் பாளங்கள்
இடிந்து இடிந்து
அவ்வப்போது
கண்களை மூடிக்கொள்ளும்
எப்படியோ
மங்கலான ஒளி
என்னுள் இருந்தே
கசிந்து கொண்டிருக்கிறது
சந்தோசமாகவே
நானும் வலிகளும்...
எனது இருத்லை
உறுதிப்படுத்தும்
வலிகளின் நீட்சியை
உணர்கிறேன்
இப்படியே
எனது பயணத்தொலைவு
தொடர்கிறது
ஆனாலும் கடந்துவிட
என் பாதைகளை
காற்றும் நீருமாக சேர்ந்து
அழித்து வருகிறது
என்னோடு கூடவே
இப்படியாக
காயங்களில்லாமலே
வலிகளும்....
பாதைகளே இல்லாமல்
பயணமும்....
எனது இருத்தலை
சந்தேகித்து
பொய்யாக்கி
புறந்தள்ளத் தயாராய்
என் சுற்றம்
ஆனாலும் விடாது தேடுகிறேன்
அடையாளங்களையும்
ஆதாரங்களையும்
என் வாழ்வையும்
இருத்தலையும்
உறுதிப்படுத்திவிடலாம் என்று....


[தினகுரல் பிரசுரம ]

Saturday, February 2, 2008

சிவப்பு நிறம் பூசப்படும் வெள்ளைச் சீருடைகள்

பள்ளிக்கனுப்பியவள்
பதறிக் கொண்டிருக்க
சீருடை சிவப்பாகிவீடு வருகிறன்
மூத்தவன்
பி.பி.சி பேட்டியாளருக்கு
நடந்ததை கலக்கமோ தயக்கமோ
சங்கடமோ இல்லாமல்
விபரித்துக்கொண்டிருக்கிறாள்
தங்கை
சாட்சியங்கள்
பொய்யான பிரேரணையின்
நியாயங்களோடு
ஒலிபரப்பப்ப்டுகிறது செய்தி
வளக்கமானசலிப்பை உதறிகொண்டு
கலைகிறது
தெருமுனைக் கடையின்
திண்ணையிலிருந்த கூட்டம்
நாளை இந்த கலக்கம்
சற்றே குறையலாம்என்கிற ஊகத்தை
கிசுகிசுத்துக்கொண்டே...
சுமந்த வயிறு
தாங்காமல்
இன்னும் அழுது கரைகிறாள் தாய்
அவன் பாலுண்ட மார்பெரிய...