Saturday, November 25, 2017

முதல் மணி


பாவம் மனசு
நொந்து வெந்துபோகிறது.
காய்த்து
தொங்கும்
வலித்திரள்களினூடு
விஷப்புழுக்கள்
தின்று கொழுத்து
உந்தி எழும்.
பாவம் உயிர்
உறிஞ்ச உறிஞ்ச
திமிறித் திமிறி விழும்.
கல்லின்மேல்
முள்ளின்மேல்
போதியும்
ஆக்கிய அச்சுக்குள் அகப்படுகிறது
புரியேறாமல்.
கரி பிரட்டி
முகம் திருத்தும் காதல்.
ஆயுள் சுருட்டி எடுத்துக்கொண்ட
காலம் சொல்லிக்கொண்டு செல்கிறது
"முதல் சாவுமணி
ஓர் கொலுசுமணி"

[தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகத்தின் வெளிச்சம் "சித்திரை - வைகாசி - 2004" இதழ்]

Sunday, November 19, 2017

சாடசி



மனச்சாட்சி
என்னை தின்றுகொண்டிருக்கிறது 
ஒருவேளை
ஊன் உருகிப்போய்
உடல் செத்துப்போகுமுன்
மனச்சாட்சி
என்னை கொன்றுபோடலாம்
அப்போது
இந்த சடம்மீது
எங்க்கள் ஊரின்
சாக்கடைகள் மட்டுமே
ஓடிக்கொண்டிருக்கும்
இன்றுள்ள
சங்க்கீதங்க்களை எல்லாம்
சத்தங்க்களாகவே
காணமுடியும் என்ன்னால்.
உங்க்களின் கூண்டில்
எண்ணப்படாத கம்பி - நான்
இப்போதெல்லாம்
ஏதோ ஒரு நப்பாசை
நோய் இருக்க
வலிகளை மட்டும்
மறந்துபோவதாக....


[சாட்சி, இது ஈழத்திலிருந்து வெளியாகிய ஈழநாதம் பத்திரிகையில் பிரசுரமான கவிதை ஒன்று - (வெள்ளிநாதம் - 12-11-2004)]