Thursday, March 24, 2011

கடலும் - துளியும்


நான் கடலில் சேர்கிற
ஒரு துளி - நீதான் கடல்.

ஒரு துளி சேர்ந்து
கடல் மாறுமோ!...

எனக்குத்தான் ஆச்சரியம்!

நான் ஓர் துளியாய்
இருந்தவன்
ஓர் கடலாய் மாறிப்போனேன் - இன்று

ஏதோ ஓர் உலகத்தில் இருந்தேன்.
இப்போது
நானே ஒரு உலகமாகிவிட்டேன்.

இந்த உலகத்தில்தான் என்னை நான் தொலைத்துவிட்டேன்

உனக்கும் என்னை ஞாபகமிருக்காது

நான்தான் ,
நான் நீயாகிப்போனதாக
இன்னும்
நினைத்துக்கொண்டிருக்கிறேன்!