Saturday, March 22, 2008

உயிர்ப்பிரிக்கை

என்னை முழுமைப்படுத்தும்
சுதந்திரம்
கால்த்துண்டாய்
உடைந்து
அதுவும் தவறப்பட்டுவிட்டது
உணர்வுகள்
எதற்கும் ஒத்துக்கொள்ளாமல்
ஆன்மாவின் குரல்
உடலில் இருந்து வேறாகி
வாழ்வைக் குறித்து
ஒலிக்கிறது
இரு துருவப் புரிதலின்
இடையே
இப்படித்தான் என்
கேள்விகளும்
நான் எதைச் சார்வது
ஆன்மாவை....
அல்லது
உடலை....

உடலின் தேவைகளே
உணர்வுகளால்,
உருவமிலா உள்ளத்தால்
உணர்த்தப்படுகின்றன

தேவைகள் அடங்கா
நிகள்தல்களில் உடலை
நிகள்காலம் பீடிக்க
வெறுமனே
மனசு அமைதியாயிருக்கிறது
நித்தியத்தை நோக்கி
ஒரு துளி
ஒளியை பொசிந்குவிட்டு...