என்னை முழுமைப்படுத்தும்
சுதந்திரம்
கால்த்துண்டாய்
உடைந்து
அதுவும் தவறப்பட்டுவிட்டது
உணர்வுகள்
எதற்கும் ஒத்துக்கொள்ளாமல்
ஆன்மாவின் குரல்
உடலில் இருந்து வேறாகி
வாழ்வைக் குறித்து
ஒலிக்கிறது
இரு துருவப் புரிதலின்
இடையே
இப்படித்தான் என்
கேள்விகளும்
நான் எதைச் சார்வது
ஆன்மாவை....
அல்லது
உடலை....
உடலின் தேவைகளே
உணர்வுகளால்,
உருவமிலா உள்ளத்தால்
உணர்த்தப்படுகின்றன
தேவைகள் அடங்கா
நிகள்தல்களில் உடலை
நிகள்காலம் பீடிக்க
வெறுமனே
மனசு அமைதியாயிருக்கிறது
நித்தியத்தை நோக்கி
ஒரு துளி
ஒளியை பொசிந்குவிட்டு...