Saturday, October 30, 2010
நான் நீயாகவும் - நீ நானாகவும்
நான் நீயாகவும்
நீ நானாகவும் இருக்கும்
தருணம் வந்தது
நீயாய் இருக்கின்ற என்னில்
எனதும் உனதும்
சாயல்கள் கலந்திருந்தன
நானாய் இருக்கின்ற
உன்னில் - நீ
நானோ நீயோ
அல்லாத சாயலொன்றில் இருந்தாய்
அந்தப் பிறிதொரு சாட்சி
நானாகவும் நீயாகவும்
பிம்பங்களைக் காட்டியது
அந்தச் சாட்சி
என்னையும் உன்னையும்
தொலைத்துவிட்டு
நான் நீயாகவும்
நீ நானாகவும் மாறும்
பிம்பங்களைச் செய்துகிண்டிருக்கிறது.
Saturday, April 17, 2010
பூ என்பது - ஒரு துறவி
கனவு, அது என் தலையில் ஏறி நின்று நடனம் புரிகிற ஒரு குளந்தை. எப்போது ஏறவேண்டும் என்பதுகூட அதற்குப் புரிவதில்லை. நான் சற்றும் நினைக்காத நேரத்தில் தன் குறும்புகளை என்மீது சுமத்தத் தொடங்கிவிடும். தூக்கம் அதன் வானம். மின்குமிழ்ச் சாத்தான்கள் விழுங்கிய இரவின் மீதி அந்தக் கனவுக்கு தாரைவார்க்கப்படுகிறது. ஏன்தான் விடிகிறதோ? இன்னும் கொஞ்சம் நீழக்கூடாதா இந்த இரவு ?...இப்படித்தான் என் ஒவ்வொரு விடியலும் அதன் ஜனனத்திலேயே வெறுக்கப்பட்டு, மறுக்கப்பட்டு, சிலதடவை மறுதலிக்கப்பட்டும் இருக்கிறது. பொய்யான் விடியல் என்று சொல்லி விடியலை வெறுக்கின்ற சிறகுகள் இருக்கமுடியுமா? சூரியன் கூடக் குளிர்ந்துபோயிருக்கின்ற பொளுதல்லவா அது!
அப்படி ஒரு பொழுதில் அலர்ந்த கனவிது, இந்தக் கனவில் நான் குளந்தையாக தவழ்ந்தேன் ஒரு பூ என்னோடு பேசியது
பூ என்பது - ஒரு துறவி
பூவே என்னோடு ஒருமுறை பேசு
உன்னைக் குறித்து எழும்
என் கேள்விகளால்
நான் மலர்ந்துவிடுகிறேன்
என்னோடு கொஞ்சம் பேசு
உன்னைப் பார்த்ததும் நான்
இதயம் இலேசாய் உணர்கிறேன்
உன் மென்மை ஸ்பரிசித்து வியக்கிறேன்
உன் அழகை அளந்து தோற்று நிற்கிறேன்
உன் அழகின் ரகசியம்தான் என்ன?
ஒருநாள் ஆயுள் என்று சொல்லி என்னை ஓரங்கட்டாதே!
OOO
பூ என்னைப் பார்த்து சிரித்தபடி சொன்னது
இயற்கை - இயல்பாய் தோன்றுகிற எல்லாமே அழகுதான்
நீ - உனது உடலில் இருந்து
எண்ணங்கள் வரைக்கும் செயற்கையை கலந்துவிடுகிறாய்
அதனால்தான் என்னைத் தேடிவருகிறாய்
இப்போதும்கூட நான்
உன்னோடு பேசிக்கொண்டுதான் இருந்தேன்
நீதான் எதையும் புரிந்துகொள்ளவில்லை
OOO
எப்போது பேசினாய்?
OOO
நான் அளைக்காமலா என்னிடம் நீ வந்தாய்!
எனது மொழி உணர்வு.
என்னிடம் ஒலி கிடையாது
எனது வார்த்தைகளே மௌனம்தான்.
எண்ணிலடங்கா அர்த்தங்களை வெளிப்படுத்துகிறேன் நான்.
நீயாகத்தான் உனக்கான பெருளை என் உணர்விலிருந்து
சேகரிந்து - வார்த்தைகளாக்கிக் கொள்ளவேண்டும்.
உனது மொழி வார்த்தைகள்
ஆனாலும் உனது வார்த்தைகள் தரும் உணர்வு எனக்கு
நன்றாகவே புரிகிறது.
எனக்கு இதயமில்லை
ஆனால் நேசமிருக்கிறது
சொல்லிவிட்டு தென்றலின் கைகளால் என்
முகம் வருடியது பூ.
OOO
மனிதன் நினைத்தால் எதுவும் முடியும்
இந்தப் பூமியை ஆழ்வதே அவந்தானே
நீங்கள் அவனால் ஆழப்படுவதற்காகவே படைக்கப்பட்டவைகள்
என்பது குறித்து நீங்கள் கவலைப்பட்டதுண்டா
OOO
பூ மீண்டும் புன்னகையோடு சொன்னது
மனிதன் நினைத்தால் எதுவும் முடியும் - சரி இருக்கட்டும்
எதிலாவது நீ திருப்த்திப்பட்டதுண்டா?
நாங்கள் உடல் வளர்கின்றோம்
உங்கள் உடலுக்குள் ஆசைகள் வளர்கின்றன
ஆழ்வதால்தான் பிளவும் பேதமும்
எங்களுக்குள் யுத்தமில்லை ஆதலால் நாங்கள் கவலைப்படுவதில்லை.
OOO
மனிதன் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றான்
சிரிக்கின்றான் அழுகின்றான்
சந்தோசங்களில் சிலாகிக்கின்றான் அது உங்களால் முடியாதே!
OOO
எங்களுக்கு ஆசைகளே இல்லாதபோது
உணர்வுகளை விற்கவேண்டிய தேவை ஏது?
OOO
அப்படியானால் நீங்கள் துறவிகளா?
OOO
ஆம் - உங்களது வரைமுறைகளில்
சிலவேளை நாங்கள் துறவிகள்தான்
OOO
ஆனால் நீங்களும் உறவுகொள்கிறீர்களே
மக்ரந்தச் சேர்க்கை என்பது மனித உடலுறவுக்கு ஒத்ததுதானே!
OOO
மகரந்தச் சேர்க்கை என்பது
எங்கள் தொழில்
எங்கள் பிறப்பின் தேவையாக மட்டுமே அதை நாங்கள் கருதுகிறோம்
எங்களைப் பொறுத்தவரையில்
உறவு என்பது வேறு இனவிருத்திக்கான தொழில் என்பது வேறு.
OOO
எப்போது உங்கள் பிறப்பு அர்த்தமுள்ளதாகி விடுவதாக உணர்கிறீர்கள்
கடவுளின் சுருபக் காலடியில் விழும்போதா?
இல்லை மரணித்தவர்களுக்கு மாலையாகும்போதா?
OOO
இரண்டிலும் இல்லை
கடவுள் என்று சொல்லி நீங்கள் எங்கள் பாதி ஆயுளைப் பறித்து
கற்சிலைகளை அலங்கரிக்கிறீர்கள்
வாழும்போது ஒரு மனிதனின் மனதை
அமைதியடையச் செய்யும் எங்களை
ஆவிபிரிந்த உடலுக்குச் சாத்துகிறீர்கள்
எந்தவகையில் அவனுக்கு நாங்கள் உதவமுடியும்?
OOO
அப்படியானால் எப்போதும் புன்னகைத்திருக்க உங்கலால் எப்படி முடிகிறது?
அப்படி எதில் திருப்த்தி கண்டுவிட்டீர்கள்?
OOO
பூமியை அழகாக்குவதில்...
மனிதனை நேசிக்கத்தூண்டுவதில்...
மனிதனின் நேசத்தின்டையாளம் - பூ
என்பதே எமது புன்னகைக்கான காரணம்
OOO
பூவே நீ என்னைப்போல எல்லா மனிதனிடமும் பேசு.
அப்போதுதான் நேசம் மலரும்,
எங்களிடம் நிஜமான நேசம் இல்லை இயல்பான காதல் இல்லை.
சுயனலத்தால் உடந்ந்துபோனோம் பிளவுபட்டோம் அழிந்துகொண்டிருக்கிறோம்
கடைசியாக மனிதனிடம் சொல்வதற்கு உங்களிடம் ஏதாவது இருக்கிறதா?
OOO
ஆம்,
உண்மையான நேசத்தை வெளிப்படுத்துங்கள்.
இந்தப் பூமிதான் உங்களின் வீடு அதை பிளவுபடுத்தாதீர்.
Friday, January 22, 2010
வளக்கு
நாம் ஒரு வீட்டுக்கு ஏதேனும் விடயமாக சென்றால் உபசரிப்பின் வடிவமாக தேநீர் தருகிறார்கள், நமக்கு தேநீர் பிடிக்கிறதோ இல்லையோ அதை நாம் அருந்தவேண்டும். இல்லைஎன்றால் வீட்டார் தம்மை நாம் அவமதிப்பதாய் உணர்வார்கள் என்கிற (வளக்கம்) பழக்கதோசப் பயம் நம்மிடமிருக்கிறது. இப்படி சமுகத்தின் சட்டமில்லாச் சட்டங்களுக்கு அதாவது பண்பாடு, கலாச்சாரம், மதச் சம்பிரதாயங்கள், குலவளக்கு, ஊர்வளக்கு சாதி வளக்கு இப்படி ஒரு நூறு வளக்குகளுக்கு கட்டுண்டு கட்டுண்டு முடங்கிக்கிடக்கிறான் மனிதன். இந்த மூட நம்பிக்கைக்ளில் இருந்து தம்மை விடுவித்துக்கொண்டு வெளியே வந்த சமுகம் நாகரீகமடைந்த சமுகமாகக் கருதப்படுகிறது. அந்த மூட நம்பிக்கைகளுக்குள் அடையுண்டுகொண்டு அவற்றை காத்துக்கொண்டும் இருக்கிறவர்களை நாகரீகமடைந்த சமுகம் ஏமாளிகளாகவே பார்க்கிறது, "பட்டிக்காட்டார்" என்ற பளந்தமிழ் வார்த்தையை பெயராகச் சூடி அளைக்கிறது.
இந்த நூற்றாண்டிலும் பட்டிக்காட்டாரா? இருக்கிறார்கள் இன்னும் சமயச் சம்பிரதாயங்கள் மறையவில்லையே! ஊர்வளக்கு அழியவில்லையே! சாதிவளக்கு சாகவில்லையே! பண்பாடு கலாச்சாரம் இவை தரும் காயங்கள் ஆறவில்லையே இன்னும்! ஆக பட்டிக்காட்டார் இன்னும் இருக்கிறார்கள்தானே. இவ்வகைச் சட்டங்களால் மனிதனை கட்டியாள்வது சமுகத்தின் ஒருசாரார் அடிமாடாய் போவது இன்னொருசாரார்.
இந்தவகையான வளக்கங்களுக்கு பளகிப் பளகியே, சமுகத்தின் இம்சைகளை சகித்துக்கொண்டு வாழவேண்டியிருக்கிறது. இந்த விடயத்தில் ஆங்கிலேயர்கள் மிகச்சரியாக இருக்கிறார்கள். அவர்கள் விருப்பப்பட்டதை மட்டுமே செய்கிறார்கள் அதேபோல தம் விருப்பத்தை இன்னொருவர்மீது திணிப்பதுமில்லை. அந்த மனனிலைதான் சுதந்திரமான உயர்தர வாழ்க்கையை அவர்களுக்கு வளங்கிருக்கிறது. இங்கே நாம் சகித்துக்கொண்டே பிறந்து சகித்துக்கொண்டே வாழ்ந்து சகித்துக்கொண்டே இறக்கவேண்டியிருக்கிறது காரணம் வைத்தியசாலை தொடங்கி சுடுகாடுவரை பிரச்சனை. நாம் நம்மைப்பற்றி நினைப்பதைவிட மற்றவரைப் பற்றியே அதிகம் நினைக்கிறோம் காரணம் நாம் ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் ஆயிரக்கணக்கான சம்பிரதாயங்களை கடக்கவேண்டியிருக்கிறது, அவற்றிலிருந்து தவறி விடுவோமோ என்கிற பயம், யாரும் அந்தச் சட்டங்களை மீறிநடக்கிறார்களா? என்று துப்பறியும் சமுகவியல் அக்கறை. ஆக எம் வாழ்வை நாம் வாழ்வதற்கு எங்கே நேரம்?
இன்றய காலத்து வளக்கங்களின் கேலிக்கூத்துக்கள் போகட்டும், பண்டயகாலத்தில் பளங்குடி மக்கள் (அல்லது மனிதக் குளுக்கள்) பின்பற்றிய வளக்கங்கள் மிகச் சுவாரிஸ்யமாகவும் வினோதமானவையாகவும் இருந்திருக்கின்றன. அதிலும் திருமணச் சடங்கு, திருமண ஒப்பந்தங்கள் மிக மிகச் சுவாரிஸ்யமானவை. அண்மையில் "மொங்கோல்" என்கிற திரைப்படம் பார்த்தேன் அது ஒரு சீனத் திரைப்படம், அதில் சொல்லப்பட்ட திருமண ஒப்பந்தம் ஆவது, ஒரு ஆண்குளந்தை தனது ஐந்து வயதில் தனக்குரிய ராணியை தெரிவுசெய்யவேண்டும் என்பதாகும். நாயகன் குளந்தையாக இருக்கும்போது தனது ராணியை தன் தகப்பனின் கருத்துக்கு மாறாக தெரிவுசெய்வதாக அதில ஒரு கட்சிவரும். இப்படி ஆச்சரியங்கள் நிறைந்ததே மனிதப் பரிமாண வளர்ச்சியுமாயிருக்கிறது.
வேறொரு பளங்குடி மக்களின் வளக்கு சுவாரிஸ்யமாகவும் அதேவேளை விசித்திரமானதாகவும் இருந்திருக்கிறது. அந்த மக்களிடம் இருந்த வளக்கு அவர்களின் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு வீட்டிற்கு நண்பர் ஒருவர் விருந்தாளியாக வந்தால் அன்றிரவு அந்த வீட்டின் ஆண்மகன் தனது மனையியை வந்தவருக்கு விருந்தாகக் கொடுக்கவேண்டும், அப்படி கொடுக்காவிட்டால் விருந்தாளி தான் அவமதிக்கப்பட்டதாக உணர்கிறான். அதுவே பகையுணர்வாகிவிடும் என்பதால் எல்லோரும் அதை பின்பற்றினார்கள் (சமுகவியல் ஆய்வு நூலிலிருந்து). இப்போதும் இந்த நிலை வளக்கத்திலிருந்தால் அதையும் பின்பற்றியிருப்பார்கள் தெய்வகுற்றம் ஆகிவிடுமே என்று சகித்துக்கொண்டு. என்ன ஆண்களுக்குத்தன் வேட்டையாக இருந்திருக்கும், பெண்கள்... இல்லை இல்லை, பெண்களில் சிலர் ஆயுதங்களோடு தீவிரவாதிகளாய் அலைந்துகொண்டிருந்திருப்பார்கள்.
இன்னொரு சுவாரிஸ்யமான வளக்கு விசாரித்தோம் கேளுங்கள், அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணகாலம் வந்தவுடன் வீதியில் ஊர்வலமாகப் போகிறாள். அங்கே அவள் காண்கிற ஆண்களில் தன்னைக் கவர்ந்தவர்களை அளைத்து தன்னோடு உறவுவைத்துக்கொள்ளுமாறு பணிக்கிறாள். அவள் கருவுற்றவுடன் ஊரைக்கூட்டி இருக்கும் ஆடவர்களில் இருந்து ஒருவரை தன் விருப்பம்போல் தெரிவுசெய்கிறாள். அந்தக்கணத்திலேயே இருவருக்கும் திருமணம் நடக்கும். இங்கே ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஆடவன் அவளுடன் முன்பு தொடர்வைத்திருக்காவிட்டாலும் கூட அவளின் தீர்ப்புக்கு பணிந்தே ஆகவேண்டும் என்பதே அந்த மக்களின் வளக்கமாக இருந்திருக்கிறது. தெரிவுசெய்யப்பட்ட ஆடவன் அதை கௌரவமாகவும் பெருமையாகவும் நினைக்கிறான். அவனுக்கு சீர்வரிசைகள் சொத்து சுகம் எல்லாம் வளங்கப்படுகிறது, இப்படி ஒரு வளக்கம். இந்தவளக்கத்தில் ஆண்களுக்குத்தான் திண்டாட்டமய் இருந்திருக்கிறது. காரணம் அங்கே பெண்களின் கையே உயர்ந்திருக்கிறது.
இப்படியான வளக்கங்கள் - சமூகச்சட்டங்கள் கதைகளாய் கேட்கிறபோது சுவாரிஸ்யமாக இருக்கலாம் ஆனால் அவற்றை வாழ்வதென்பது எத்தனை கொடுமையானதென்பது நம்மால் ஜீரணித்துப்பார்க்கக்கூட முடியாது. அதைவிட அன்றய மக்களுக்கு அந்த வளக்கங்களை பின்பற்றுவதிலும் அவற்றை பாதுகாப்பதே மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. இப்படி தத்தம் வளக்குகளை (பண்பாடு) பாதுகாப்பதில் வெவ்வேறு பளக்கங்களையுடைய மக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளால் விளைந்த பகைமை போராகி அழிந்துபோன இனங்கள், மொழ்கள் ஐந்தாயிரத்திற்கும் அதிகமாயிருக்கிறது. வளக்கங்களால் வாழ்ந்த இனமொன்று உண்டா? பளக்கங்களால் பருத்த மொழி ஒன்றுண்டா? என்றால் 'இல்லை' என்பதே பதிலாகக்க் கிடைக்கும்.
இன்னும் பூமியில் மனிதன் தன்னைத்தானே கொன்றளிகிறதன் அடிப்படை எங்கிருந்து வந்தது, மேலே சொல்லப்பட்ட வளக்குகளில் இருந்துதானே!
ஆக இன்னும் நாம் எதற்காக வளக்கங்களால் எம்மையே முடக்கிக்கொண்டும், சகித்துக்கொண்டும் வாழவெண்டும்?
மனிதா வளக்கங்களை விங்ஞானமாய் மாற்று வளக்கங்களை மனிதத்துக்காய் செலவிடு, மறுநாளே பூமி தன்னை புன்னகைகளால் நிறைக்கக் காத்திருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)