Saturday, April 11, 2009

நான் ஒரு சிறைக் கைதி


நான் ஒரு சிறைக் கைதி
யாரும் தீர்ப்பிடாத
குற்றங்களுக்காக
கம்பிகளே இல்லாத கூண்டொன்றில்
அடையுண்டுகிடக்கிறேன்
எனக்கு தீர்ப்பெழுதக்கூடிய
அந்த நீதிதேவன்
வருவான் எனச்சொல்கிறார்கள்
என்னை இங்கிருந்து மீட்க
அவன் வருவதற்கான
அறிகுறிகளேதுமில்லை
இதுவரை வந்ததுமில்லை
நானும் கூடவே
சேர்ந்து தேடினேன்
அவன் முகவரியாவது சிக்குமென்று
பல ஆண்டுகள்
தேடியதில்
இறுதியாகக் கண்டுபிடித்தேன்
அவன் வீட்டுக்கான
சில நூறு முகவரிகளில் எதிலும்
அவன் இல்லை என்று

இறுதியாக
நானே எழுதினேன்
எனக்கான தீர்ப்பை
நான் சுமந்துகொண்டிருக்கும்
காரணங்களற்ற குற்றங்களை
தள்ளுபடிசெய்துகொண்டு
"உலகம் தண்டிக்கப்படக்கூடியது"
என்று

6 comments:

ஆ.ஞானசேகரன் said...

கனமான வரிகள்....

நட்புடன் ஜமால் said...

மீண்டும் மீண்டும் படிக்கின்றேன்

முடிவுரை அருமை.

அன்புடன் அருணா said...

//நான் சுமந்துகொண்டிருக்கும்
காரணங்களற்ற குற்றங்களை
தள்ளுபடிசெய்துகொண்டு
"உலகம் தண்டிக்கப்படக்கூடியது"
என்று//

அழகான தீர்ப்பு....அடிக்கடி எழுதலாமே சஹாரா புன்னகை??
அன்புடன் அருணா

ப. அருள்நேசன் said...

வாங்க ஆ.ஞானசேகரன்
//கனமான வரிகள்....//

ம்ம், நன்றி
சினேகத்துடன்
ப.அருள்நேசன்

ப. அருள்நேசன் said...

//மீண்டும் மீண்டும் படிக்கின்றேன்
முடிவுரை அருமை.//

ஜமால் சரி அப்போ உலகத்தை தண்டிச்சிடலாமா ஹா ஹா

ப. அருள்நேசன் said...

//அழகான தீர்ப்பு....அடிக்கடி எழுதலாமே சஹாரா புன்னகை??//
முயற்சிக்கிறேன் அருணா அக்கா,

அருள்நேசன் என்றே அளைக்கலாம் அக்கா , ஆட்சேபனை இல்லை "தம்பி" என்றே கூப்பிடலாம்