மீண்டும் வருகிறோம்
நீங்கள் வாருங்கள்! என்று 
வரவேற்கப் போவதில்லை 
என்பது தெரியும்
எங்களின் வரவு குறித்து 
நீங்கள் மகிளாது போனாலும்
வெறுப்பையாவது 
காட்டாதிருப்பீர்களா?....
என்பதுதான் 
எங்களின் எதிர்பார்ப்பு
இதென்ன கேள்வி
அடித்துத் துரத்தப்பட்டவர்கள்
நாங்கள்
விடுமுறைக்கு சென்று வரவில்லை
வஞ்சகம் தீர்க்கப்பட்டவர்கள்
நாங்கள்
வாக்கப்பட்டு ( வாழ்க்கை பெற்ரு )
போகவில்லை
துரத்தியவனையே தேடி
வந்திருக்கிறோம்
அடிமையாக்கப்பட சமமதித்துக்கொண்டு
கருணையாவது கழிவிரக்கமாவது
கடைசிவரை கிடையாது
நமது மன்றாட்டங்களுக்கு மடிப்பிச்சை
வேறு வழியின்றி 
வந்த்திறுக்கிறோம்
சுற்றிவரக் கடல்
ஒரு சிறங்கை நிலம்
அதற்குள் எங்குதான் ஓடி ஒழிவது
அதனால் எங்களை நாங்களே
காட்டிக் கொடுக்கிறோம்
இதோ நாம் என்று
இன்னொருமுறை 
அவனுக்கு கொலைவெறி
எடுக்கிறபோது
இரத்த தாகத்தை 
தீர்த்துக்கொள் என்றுத்தான்
எங்களைத் தருகிறோம்
அதுவரை எங்களை கொஞ்சம் 
ஓரமாக இருக்கவிடு
சம்மதித்துவிட்டாய் 
நீ சம்மதித்துவிட்டாய்
அரை மனமுமில்லை
கால் மனமுமில்லை
மனமேயில்லாமல் சம்மதிதுவட்டாய்
கோபம் வருகிறபோது 
அடித்துத் துவைக்க
ஒரு கந்த்ல் கிடைத்திருக்கிறது
என்பத்ற்காக
சம்மதித்துவிட்டாய்
எப்படியோ
மீண்டும் வருகிரோம் நாங்கள்
கொலை செய்யப்பட்ட
எங்கள் புன்னகைகளையும்
தெருவழியே அவன் 
அடிக்கடி 
எம்மைக் கிழறிச் சோதனை செய்த
வலிகளையும் 
தூக்கித் தோழ்மீது 
சுமந்துகொண்டு வருகிறோம்
நாங்கள் யார் என்று 
உங்களுக்காவது தெரிகிறதா
எதைத் தவறவிட்டாலும்  
அடையாளங்களை மட்டும்
நாங்கள் மறப்பதில்லை
இதோ பாருங்கள்
வெய்யில் எங்கள் மேனியில் 
எழுதிய கறுப்பு
செடிகள் எம் சோகம்
கண்டு 
பூப்பூக்க மறுத்தாலும்
நிறுத்தாது 
விழிகளில் பூக்கும் 
கண்ணீர் மழலை முகங்களே
பொதுவான எங்கள் அடையாளம்
நெற்றியில் திலகமிட்ட
எம் அன்னையின் நாவில் 
அமுது பொங்கும் தமிழே
எங்களின் 
அடையாளம்
ஒரு யுகமாக 
விடியாத வானத்தின் கீழ்
அடையுண்ட 
ஈழ்த்தின் துயரம்
நாங்கள்
இதுவே எங்கள் 
அடையாளம்
நீங்களும் பாருங்கள்
அவர்களுக்குத்தான் 
எத்தனை முறை காட்டினாலும்
புரியவில்லை
தூக்கிப்போய் சிறயில் அடைக்கிறார்கள்
நிரூபிக்கப்படாத அடையாளங்களாம் நாம்
மீண்டும் வருகிறோம்
சிறயிலிருந்து
பல்களைக்களகத்திலிருந்து 
துரத்தப்பட்டு
கலக்கப்பட்டு
சந்தேகத்தில் பிடிக்கப்பட்ட
தமிழ் மாணவர்கள்
விடுதலையாகி வருகிறோம்
உடமைகள் இழ்ந்து
வெறும் கையோடு...
மீண்டும் கனவுகள்
சேகரிக்கத் தயாராகிவிட்டோம்
எங்களைப் பார்த்து 
வருத்தப்படுறீங்களா
நீங்க வேற....
இது எங்களுக்கு பளகிவிட்டது
உள்ளே நடந்தது சொல்ல
இப்ப நேரமில்லை
சொல்லச் சொல்ல
தீராது
வாசலை பூட்டிவிடுவார்கள்
அத்ற்குள் செல்லவேண்டும்
எந்தவாசலா!
றோட்டு வாசல்
அது உப்பிடித்தான்
பாதுகாப்பு என்று சொல்லி றோட்டை
மறிச்சு கதவு போட்டிருக்கிறார்கள்
பூட்டமுதல் போகவேணும்
வழியில் சந்தித்தோம்
வீட்ட வாங்கோ
நிறய பேசலாம்
வீடு இரவல் வீடுடுதான்
அகதிக்கு பிறகென்ன 
அடுக்கு மாடியா வாசம்
போட்டுவாறன்
3 comments:
நடைமுறையையும் அதனுள் மறைந்திருக்கும் வலிகளையும் மிகவும் உணர்வுபூர்வமாக எழுதி உள்ளீர்கள். மனதை தொட்டது! விடிவு காலம் நிச்சயம் உண்டு. நிம்மதியான வாழ்க்கைக்கு பிரார்த்திக்கிறேன்.
வாங்க மது.
என் தோட்டத்தில் புதிதாக முதன்முதலில்
உங்களை பார்க்கிறேன், சந்தோசம். நீ யார்? கேட்டால் ஒடிவிட மாட்டீங்களே! எப்படி என் வாசல் ஒரு புதியவருக்கு தெரிந்தது என்ற ஆச்சரியம்தான்
நீங்களாகச் சொல்லும்வரை காத்திருக்கிறேன்.
கருத்துக்கும் உங்கள் பிரார்த்தனைக்கும் நன்றிகள்
:)
Post a Comment