
தேன் மொழியே
கனியிதழே
குளிர் வனமே
கொஞ்சும் நிலவே - மேனி
கூசும் தென்றலே
மெல்லத் தத்தும் மேகமே
நெருப்பூங்குவளைச் சூரியனே
கசங்காத வானமே
கரைகின்ற மழையே
மலரே
கடலே
அலையே
பூமி நரம்பு அருவிகளே
புல்வெளியே
வில்வானில் விளைந்த
வெள்ளிகளே
என்னையும் உங்களோடு
சேர்த்துக்கொள்ளுங்கள்
இன்றுமுதல்
நான் கவிதை எழுதுபவன் அல்ல
கவிப்பாத்திரமாகிறேன்
காரணம்
என்னயும் ஒருத்தி
காதலிக்கிறாள்