Sunday, October 12, 2008

விடுதலை வானம்

கொடியில் படபடக்கிறது
மனவசின் சல்லடைகள்
கனவிற்கும் நிஐத்திற்குமாய்
இடம்பெயர்ந்துகொண்டு – புத்தகத்
தாள்களைத் தட்டுகிறேன.
நாளைய 9.00 மணி
புகையிரதச் சத்தம்
இருதயத்தின் தொலைவில்
கேட்கிறது.
தொலைவானில் இன்னொரு
விடுமுறைச் சிறகுகள் கட்டவிழ்கின்றன.

இன்னும் ஒரு வருடத்திற்கான
அன்பை – அம்மாவின்
மடியில் தலைசாய்த்து
ஸ்பரித்துக் கொண்டிருக்கின்றேன்
பிரிவு இயலாமையின்
குரல் ஒன்று
ஒப்பாரிக்குத் தயாராகிறது

அறையின் உட்புறமாய்
தட்டுகிறது கடிகாரம்
சில மணிகளை பாய்ந்து கடந்து
நிஐத்தில் மீழ்கிறேன்
இன்னும் பாதை திறக்கவேயில்லை.
மீண்டும் அப்பிக்கொள்கிறது
வீடு செல்ல இயலாத் துயரம்

யன்னலைத் திறந்து
நுளையும்
என் பார்வையில்
மழை நனைத்த
செடிகளிலிருந்து
உதிர்ந்து கிடக்கின்றன
என் புன்னகைகள்

No comments: