Wednesday, February 2, 2011

நாத்திகக் கடவுள்


அந்த மனிதன்
மிகச் சோகமாக ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தான்

அவன் காணவந்த மக்கள்
கோவில்களிலும் பள்ளிகளிலும் தேவாலயங்களிலும்...இருந்தார்கள்.

நீண்ட நாட்களாக அவன் வந்து போய்க்கொண்டிருந்தான்
யாரும் அவனை கண்டுகொள்ளவில்லை

அவனுக்குச் சொந்தமான நிலம்
அறுபட்டு சதைத் துண்டங்களாகக் கிடந்தது
அறுபட்ட நிலத்தின் இடையே
மனித இரத்தம் கசிந்துகொண்டிருந்தது

மக்கள் கூட்டம் கூட்டமாக - அந்த
அறுபட்ட நிலத்தில் நின்றுகொண்டு
அதன் எஜமானுக்கு
ஆராதனைகளையும் அபிசேகங்களையும் செய்தார்கள்

அதிலிருந்து கலைந்து கூடிய மக்களை பார்த்து
பரவசத்துடன் அவன் எழுந்து சென்றான்

அவன் அவர்களை நெருங்குமுன்
கலவரம் கட்டவிழ்ந்தது
நிலம் மீண்டும் அறுபட்டது

எதிர்ப்பட்டவர்கள்
அந்த மனிதனை வழிமறித்தார்கள்
"நீ எந்த மதம்"
எனக்கேட்டார்கள் - அவன்
"என்னிடம் மதங்கள் இருக்கவில்லை" என்றான்
"இவன் நாத்திகன்" என்று சொல்லி
எல்லோருமாய்ச் சேர்ந்து அவனை
அந்த நிலத்திலிருந்து தூக்கி எறிந்தார்கள்

யாகம் கலைந்து எழுந்தவர்கள் சொல்லிக்கொண்டார்கள்
சாத்தான்களும் அசுரர்களும்
தங்கள் கடவுளின் வருகையை தடுத்துவிட்டார்கள் என்று...

Saturday, October 30, 2010

நான் நீயாகவும் - நீ நானாகவும்


நான் நீயாகவும்
நீ நானாகவும் இருக்கும்
தருணம் வந்தது


நீயாய் இருக்கின்ற என்னில்
எனதும் உனதும்
சாயல்கள் கலந்திருந்தன


நானாய் இருக்கின்ற
உன்னில் - நீ
நானோ நீயோ
அல்லாத சாயலொன்றில் இருந்தாய்


அந்தப் பிறிதொரு சாட்சி
நானாகவும் நீயாகவும்
பிம்பங்களைக் காட்டியது


அந்தச் சாட்சி
என்னையும் உன்னையும்
தொலைத்துவிட்டு
நான் நீயாகவும்
நீ நானாகவும் மாறும்
பிம்பங்களைச் செய்துகிண்டிருக்கிறது.

Saturday, April 17, 2010

பூ என்பது - ஒரு துறவி


கனவு, அது என் தலையில் ஏறி நின்று நடனம் புரிகிற ஒரு குளந்தை. எப்போது ஏறவேண்டும் என்பதுகூட அதற்குப் புரிவதில்லை. நான் சற்றும் நினைக்காத நேரத்தில் தன் குறும்புகளை என்மீது சுமத்தத் தொடங்கிவிடும். தூக்கம் அதன் வானம். மின்குமிழ்ச் சாத்தான்கள் விழுங்கிய இரவின் மீதி அந்தக் கனவுக்கு தாரைவார்க்கப்படுகிறது. ஏன்தான் விடிகிறதோ? இன்னும் கொஞ்சம் நீழக்கூடாதா இந்த இரவு ?...இப்படித்தான் என் ஒவ்வொரு விடியலும் அதன் ஜனனத்திலேயே வெறுக்கப்பட்டு, மறுக்கப்பட்டு, சிலதடவை மறுதலிக்கப்பட்டும் இருக்கிறது. பொய்யான் விடியல் என்று சொல்லி விடியலை வெறுக்கின்ற சிறகுகள் இருக்கமுடியுமா? சூரியன் கூடக் குளிர்ந்துபோயிருக்கின்ற பொளுதல்லவா அது!

அப்படி ஒரு பொழுதில் அலர்ந்த கனவிது, இந்தக் கனவில் நான் குளந்தையாக தவழ்ந்தேன் ஒரு பூ என்னோடு பேசியது

பூ என்பது - ஒரு துறவி

பூவே என்னோடு ஒருமுறை பேசு
உன்னைக் குறித்து எழும்
என் கேள்விகளால்
நான் மலர்ந்துவிடுகிறேன்
என்னோடு கொஞ்சம் பேசு

உன்னைப் பார்த்ததும் நான்
இதயம் இலேசாய் உணர்கிறேன்
உன் மென்மை ஸ்பரிசித்து வியக்கிறேன்
உன் அழகை அளந்து தோற்று நிற்கிறேன்

உன் அழகின் ரகசியம்தான் என்ன?
ஒருநாள் ஆயுள் என்று சொல்லி என்னை ஓரங்கட்டாதே!

OOO

பூ என்னைப் பார்த்து சிரித்தபடி சொன்னது
இயற்கை - இயல்பாய் தோன்றுகிற எல்லாமே அழகுதான்
நீ - உனது உடலில் இருந்து
எண்ணங்கள் வரைக்கும் செயற்கையை கலந்துவிடுகிறாய்
அதனால்தான் என்னைத் தேடிவருகிறாய்

இப்போதும்கூட நான்
உன்னோடு பேசிக்கொண்டுதான் இருந்தேன்
நீதான் எதையும் புரிந்துகொள்ளவில்லை

OOO

எப்போது பேசினாய்?

OOO

நான் அளைக்காமலா என்னிடம் நீ வந்தாய்!

எனது மொழி உணர்வு.
என்னிடம் ஒலி கிடையாது
எனது வார்த்தைகளே மௌனம்தான்.
எண்ணிலடங்கா அர்த்தங்களை வெளிப்படுத்துகிறேன் நான்.
நீயாகத்தான் உனக்கான பெருளை என் உணர்விலிருந்து
சேகரிந்து - வார்த்தைகளாக்கிக் கொள்ளவேண்டும்.

உனது மொழி வார்த்தைகள்
ஆனாலும் உனது வார்த்தைகள் தரும் உணர்வு எனக்கு
நன்றாகவே புரிகிறது.

எனக்கு இதயமில்லை
ஆனால் நேசமிருக்கிறது

சொல்லிவிட்டு தென்றலின் கைகளால் என்
முகம் வருடியது பூ.

OOO

மனிதன் நினைத்தால் எதுவும் முடியும்
இந்தப் பூமியை ஆழ்வதே அவந்தானே
நீங்கள் அவனால் ஆழப்படுவதற்காகவே படைக்கப்பட்டவைகள்
என்பது குறித்து நீங்கள் கவலைப்பட்டதுண்டா

OOO

பூ மீண்டும் புன்னகையோடு சொன்னது
மனிதன் நினைத்தால் எதுவும் முடியும் - சரி இருக்கட்டும்
எதிலாவது நீ திருப்த்திப்பட்டதுண்டா?

நாங்கள் உடல் வளர்கின்றோம்
உங்கள் உடலுக்குள் ஆசைகள் வளர்கின்றன

ஆழ்வதால்தான் பிளவும் பேதமும்
எங்களுக்குள் யுத்தமில்லை ஆதலால் நாங்கள் கவலைப்படுவதில்லை.

OOO

மனிதன் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றான்
சிரிக்கின்றான் அழுகின்றான்
சந்தோசங்களில் சிலாகிக்கின்றான் அது உங்களால் முடியாதே!

OOO

எங்களுக்கு ஆசைகளே இல்லாதபோது
உணர்வுகளை விற்கவேண்டிய தேவை ஏது?

OOO

அப்படியானால் நீங்கள் துறவிகளா?

OOO

ஆம் - உங்களது வரைமுறைகளில்
சிலவேளை நாங்கள் துறவிகள்தான்

OOO

ஆனால் நீங்களும் உறவுகொள்கிறீர்களே
மக்ரந்தச் சேர்க்கை என்பது மனித உடலுறவுக்கு ஒத்ததுதானே!

OOO

மகரந்தச் சேர்க்கை என்பது
எங்கள் தொழில்
எங்கள் பிறப்பின் தேவையாக மட்டுமே அதை நாங்கள் கருதுகிறோம்
எங்களைப் பொறுத்தவரையில்
உறவு என்பது வேறு இனவிருத்திக்கான தொழில் என்பது வேறு.

OOO

எப்போது உங்கள் பிறப்பு அர்த்தமுள்ளதாகி விடுவதாக உணர்கிறீர்கள்
கடவுளின் சுருபக் காலடியில் விழும்போதா?
இல்லை மரணித்தவர்களுக்கு மாலையாகும்போதா?

OOO

இரண்டிலும் இல்லை

கடவுள் என்று சொல்லி நீங்கள் எங்கள் பாதி ஆயுளைப் பறித்து
கற்சிலைகளை அலங்கரிக்கிறீர்கள்

வாழும்போது ஒரு மனிதனின் மனதை
அமைதியடையச் செய்யும் எங்களை
ஆவிபிரிந்த உடலுக்குச் சாத்துகிறீர்கள்
எந்தவகையில் அவனுக்கு நாங்கள் உதவமுடியும்?

OOO

அப்படியானால் எப்போதும் புன்னகைத்திருக்க உங்கலால் எப்படி முடிகிறது?
அப்படி எதில் திருப்த்தி கண்டுவிட்டீர்கள்?

OOO

பூமியை அழகாக்குவதில்...
மனிதனை நேசிக்கத்தூண்டுவதில்...

மனிதனின் நேசத்தின்டையாளம் - பூ
என்பதே எமது புன்னகைக்கான காரணம்


OOO

பூவே நீ என்னைப்போல எல்லா மனிதனிடமும் பேசு.
அப்போதுதான் நேசம் மலரும்,
எங்களிடம் நிஜமான நேசம் இல்லை இயல்பான காதல் இல்லை.
சுயனலத்தால் உடந்ந்துபோனோம் பிளவுபட்டோம் அழிந்துகொண்டிருக்கிறோம்

கடைசியாக மனிதனிடம் சொல்வதற்கு உங்களிடம் ஏதாவது இருக்கிறதா?

OOO

ஆம்,

உண்மையான நேசத்தை வெளிப்படுத்துங்கள்.

இந்தப் பூமிதான் உங்களின் வீடு அதை பிளவுபடுத்தாதீர்.

Friday, January 22, 2010

வளக்கு


நாம் ஒரு வீட்டுக்கு ஏதேனும் விடயமாக சென்றால் உபசரிப்பின் வடிவமாக தேநீர் தருகிறார்கள், நமக்கு தேநீர் பிடிக்கிறதோ இல்லையோ அதை நாம் அருந்தவேண்டும். இல்லைஎன்றால் வீட்டார் தம்மை நாம் அவமதிப்பதாய் உணர்வார்கள் என்கிற (வளக்கம்) பழக்கதோசப் பயம் நம்மிடமிருக்கிறது. இப்படி சமுகத்தின் சட்டமில்லாச் சட்டங்களுக்கு அதாவது பண்பாடு, கலாச்சாரம், மதச் சம்பிரதாயங்கள், குலவளக்கு, ஊர்வளக்கு சாதி வளக்கு இப்படி ஒரு நூறு வளக்குகளுக்கு கட்டுண்டு கட்டுண்டு முடங்கிக்கிடக்கிறான் மனிதன். இந்த மூட நம்பிக்கைக்ளில் இருந்து தம்மை விடுவித்துக்கொண்டு வெளியே வந்த சமுகம் நாகரீகமடைந்த சமுகமாகக் கருதப்படுகிறது. அந்த மூட நம்பிக்கைகளுக்குள் அடையுண்டுகொண்டு அவற்றை காத்துக்கொண்டும் இருக்கிறவர்களை நாகரீகமடைந்த சமுகம் ஏமாளிகளாகவே பார்க்கிறது, "பட்டிக்காட்டார்" என்ற பளந்தமிழ் வார்த்தையை பெயராகச் சூடி அளைக்கிறது.

இந்த நூற்றாண்டிலும் பட்டிக்காட்டாரா? இருக்கிறார்கள் இன்னும் சமயச் சம்பிரதாயங்கள் மறையவில்லையே! ஊர்வளக்கு அழியவில்லையே! சாதிவளக்கு சாகவில்லையே! பண்பாடு கலாச்சாரம் இவை தரும் காயங்கள் ஆறவில்லையே இன்னும்! ஆக பட்டிக்காட்டார் இன்னும் இருக்கிறார்கள்தானே. இவ்வகைச் சட்டங்களால் மனிதனை கட்டியாள்வது சமுகத்தின் ஒருசாரார் அடிமாடாய் போவது இன்னொருசாரார்.

இந்தவகையான வளக்கங்களுக்கு பளகிப் பளகியே, சமுகத்தின் இம்சைகளை சகித்துக்கொண்டு வாழவேண்டியிருக்கிறது. இந்த விடயத்தில் ஆங்கிலேயர்கள் மிகச்சரியாக இருக்கிறார்கள். அவர்கள் விருப்பப்பட்டதை மட்டுமே செய்கிறார்கள் அதேபோல தம் விருப்பத்தை இன்னொருவர்மீது திணிப்பதுமில்லை. அந்த மனனிலைதான் சுதந்திரமான உயர்தர வாழ்க்கையை அவர்களுக்கு வளங்கிருக்கிறது. இங்கே நாம் சகித்துக்கொண்டே பிறந்து சகித்துக்கொண்டே வாழ்ந்து சகித்துக்கொண்டே இறக்கவேண்டியிருக்கிறது காரணம் வைத்தியசாலை தொடங்கி சுடுகாடுவரை பிரச்சனை. நாம் நம்மைப்பற்றி நினைப்பதைவிட மற்றவரைப் பற்றியே அதிகம் நினைக்கிறோம் காரணம் நாம் ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் ஆயிரக்கணக்கான சம்பிரதாயங்களை கடக்கவேண்டியிருக்கிறது, அவற்றிலிருந்து தவறி விடுவோமோ என்கிற பயம், யாரும் அந்தச் சட்டங்களை மீறிநடக்கிறார்களா? என்று துப்பறியும் சமுகவியல் அக்கறை. ஆக எம் வாழ்வை நாம் வாழ்வதற்கு எங்கே நேரம்?

இன்றய காலத்து வளக்கங்களின் கேலிக்கூத்துக்கள் போகட்டும், பண்டயகாலத்தில் பளங்குடி மக்கள் (அல்லது மனிதக் குளுக்கள்) பின்பற்றிய வளக்கங்கள் மிகச் சுவாரிஸ்யமாகவும் வினோதமானவையாகவும் இருந்திருக்கின்றன. அதிலும் திருமணச் சடங்கு, திருமண ஒப்பந்தங்கள் மிக மிகச் சுவாரிஸ்யமானவை. அண்மையில் "மொங்கோல்" என்கிற திரைப்படம் பார்த்தேன் அது ஒரு சீனத் திரைப்படம், அதில் சொல்லப்பட்ட திருமண ஒப்பந்தம் ஆவது, ஒரு ஆண்குளந்தை தனது ஐந்து வயதில் தனக்குரிய ராணியை தெரிவுசெய்யவேண்டும் என்பதாகும். நாயகன் குளந்தையாக இருக்கும்போது தனது ராணியை தன் தகப்பனின் கருத்துக்கு மாறாக தெரிவுசெய்வதாக அதில ஒரு கட்சிவரும். இப்படி ஆச்சரியங்கள் நிறைந்ததே மனிதப் பரிமாண வளர்ச்சியுமாயிருக்கிறது.

வேறொரு பளங்குடி மக்களின் வளக்கு சுவாரிஸ்யமாகவும் அதேவேளை விசித்திரமானதாகவும் இருந்திருக்கிறது. அந்த மக்களிடம் இருந்த வளக்கு அவர்களின் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு வீட்டிற்கு நண்பர் ஒருவர் விருந்தாளியாக வந்தால் அன்றிரவு அந்த வீட்டின் ஆண்மகன் தனது மனையியை வந்தவருக்கு விருந்தாகக் கொடுக்கவேண்டும், அப்படி கொடுக்காவிட்டால் விருந்தாளி தான் அவமதிக்கப்பட்டதாக உணர்கிறான். அதுவே பகையுணர்வாகிவிடும் என்பதால் எல்லோரும் அதை பின்பற்றினார்கள் (சமுகவியல் ஆய்வு நூலிலிருந்து). இப்போதும் இந்த நிலை வளக்கத்திலிருந்தால் அதையும் பின்பற்றியிருப்பார்கள் தெய்வகுற்றம் ஆகிவிடுமே என்று சகித்துக்கொண்டு. என்ன ஆண்களுக்குத்தன் வேட்டையாக இருந்திருக்கும், பெண்கள்... இல்லை இல்லை, பெண்களில் சிலர் ஆயுதங்களோடு தீவிரவாதிகளாய் அலைந்துகொண்டிருந்திருப்பார்கள்.

இன்னொரு சுவாரிஸ்யமான வளக்கு விசாரித்தோம் கேளுங்கள், அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணகாலம் வந்தவுடன் வீதியில் ஊர்வலமாகப் போகிறாள். அங்கே அவள் காண்கிற ஆண்களில் தன்னைக் கவர்ந்தவர்களை அளைத்து தன்னோடு உறவுவைத்துக்கொள்ளுமாறு பணிக்கிறாள். அவள் கருவுற்றவுடன் ஊரைக்கூட்டி இருக்கும் ஆடவர்களில் இருந்து ஒருவரை தன் விருப்பம்போல் தெரிவுசெய்கிறாள். அந்தக்கணத்திலேயே இருவருக்கும் திருமணம் நடக்கும். இங்கே ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஆடவன் அவளுடன் முன்பு தொடர்வைத்திருக்காவிட்டாலும் கூட அவளின் தீர்ப்புக்கு பணிந்தே ஆகவேண்டும் என்பதே அந்த மக்களின் வளக்கமாக இருந்திருக்கிறது. தெரிவுசெய்யப்பட்ட ஆடவன் அதை கௌரவமாகவும் பெருமையாகவும் நினைக்கிறான். அவனுக்கு சீர்வரிசைகள் சொத்து சுகம் எல்லாம் வளங்கப்படுகிறது, இப்படி ஒரு வளக்கம். இந்தவளக்கத்தில் ஆண்களுக்குத்தான் திண்டாட்டமய் இருந்திருக்கிறது. காரணம் அங்கே பெண்களின் கையே உயர்ந்திருக்கிறது.

இப்படியான வளக்கங்கள் - சமூகச்சட்டங்கள் கதைகளாய் கேட்கிறபோது சுவாரிஸ்யமாக இருக்கலாம் ஆனால் அவற்றை வாழ்வதென்பது எத்தனை கொடுமையானதென்பது நம்மால் ஜீரணித்துப்பார்க்கக்கூட முடியாது. அதைவிட அன்றய மக்களுக்கு அந்த வளக்கங்களை பின்பற்றுவதிலும் அவற்றை பாதுகாப்பதே மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. இப்படி தத்தம் வளக்குகளை (பண்பாடு) பாதுகாப்பதில் வெவ்வேறு பளக்கங்களையுடைய மக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளால் விளைந்த பகைமை போராகி அழிந்துபோன இனங்கள், மொழ்கள் ஐந்தாயிரத்திற்கும் அதிகமாயிருக்கிறது. வளக்கங்களால் வாழ்ந்த இனமொன்று உண்டா? பளக்கங்களால் பருத்த மொழி ஒன்றுண்டா? என்றால் 'இல்லை' என்பதே பதிலாகக்க் கிடைக்கும்.

இன்னும் பூமியில் மனிதன் தன்னைத்தானே கொன்றளிகிறதன் அடிப்படை எங்கிருந்து வந்தது, மேலே சொல்லப்பட்ட வளக்குகளில் இருந்துதானே!

ஆக இன்னும் நாம் எதற்காக வளக்கங்களால் எம்மையே முடக்கிக்கொண்டும், சகித்துக்கொண்டும் வாழவெண்டும்?

மனிதா வளக்கங்களை விங்ஞானமாய் மாற்று வளக்கங்களை மனிதத்துக்காய் செலவிடு, மறுநாளே பூமி தன்னை புன்னகைகளால் நிறைக்கக் காத்திருக்கிறது.

Monday, September 21, 2009

நிறம் மாறாத நினைவுகள்


இது ஒரு பிரபல்யமடையாத உன்னதமான ஒரு மனிதனின் கதை. அலங்காரங்கள் சூடப்படாமல் எழுதப்படுகிற ஓர் இளைஞனின் வரலாறு. எனது எழுத்துக்கள் அவருக்கு மரியாதை செய்யும் என்ற நம்பிக்கையில் உள்ளே நுழைகிறேன்.

எடின் ஜூட், ஒரு நடுத்தரவர்க்க குடும்பத்தின் இரண்டாவது பிள்ளை. அவருக்கு மூத்த சகோதரி ஜூடித், அவர்கள் எப்போதும் நண்பர்களைப்போலவே பழகுவார்கள். அன்பு மட்டுமே தெரிந்த அம்மா, பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றித்தர எப்போதும் தயாராயிருக்கிற அப்பா, இதுதான் எடினின் அமைதியான குடும்பம்.
எடின் தனது விருப்பங்களை எப்போதும் தனது பெற்றோரிடம் எடுத்துச்சென்று சம்மதம் பெற்ற பின்னரே எதையும் செய்வான். ஆனால் யூடித், தான் நினைத்ததை செய்தேமுடிக்கும் பிடிவாதக்காரி. படிப்பில் இருவரும் மிகவும் திறமைசாலிகள், எடின் படிப்பு மட்டும் அல்லாமல் நல்ல மேடைப்பேச்சாளனாகவும் இருந்தான்.

அப்போது எடின் உயர்தரம் படித்துக்கொண்டிருந்தான், வசிட்டர்கள் வாயால் இவன் "பொறியியல் பீடம்" செல்வான் என்று முத்திரை குத்தினார்கள். வசிட்டர்களுக்கு திறமைசாலிகளை அடையாளம் காணத்தெரியுமே தவிர வருங்காலத்தை எதிர்வுகூறவா முடியும். அந்த நாட்களில் எடின், கம்யூனிஸம், பொருளாதாரம், அரசியல், சமுகவியல்..... என்று தேடித் தேடி படித்து அனல் பறக்க மேடைகளில் பேசிக்கொண்டிருந்தான்.

இப்படி இருக்கும்போது ஒருநாள் எடின் பாடசாலை முடித்து வீட்டுக்கு வருகிறான், உடைகளை மாற்றிக்கொண்டு நேராக தாயிடம் செல்கிறான். " அம்மா, நான் போராட்டத்தில் என்னையும் இணைத்துக்கொள்ளப் போகிறேன்" என்று சொல்கிறான். தாய் அதிர்ச்சிகலந்த வேதனையோடு அமைதியாய் இருக்கிறாள். "அம்மா, ...." அவன் அவள் காலடியில் வந்து அமர்கிறான். "அப்பாவை கேட்டிட்டு போப்ப்பா" அவன் தலையை வருடியபடி எங்கோ வெறித்தபடி சொல்கிறாள் தாய். அவன் வளமையான புன்னகையோடு எழுந்து செல்கிறான்
எடின் அப்பாவின் அறைக்குள் செல்கிறான், "அப்பா உங்களோட ஒரு விசயம் பேசவேணும்"
தந்தை, புரட்டிக்கொண்டிருந்த பத்திரிகையை ஓரமாக வைத்துவிட்டு கேட்கிறார் "என்னப்பா என்ன விசயம்..... என்ன வேணும் கேளுங்கோ" வரப்போகிற துயரத்தை அறியாமலே தந்தை அவனது முகத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார். "அப்பா நான் இயக்கத்தில சேரலாம் எண்டு இருக்கிறன்" அந்த நிமிடத்திலேயே எரிமலையாய் வெடித்துப்போனவர், எந்தவித சஞ்சலமும் இல்லாமல் கேட்கிறார் " நல்லா யோசிச்சுத்தான் முடிவெடுத்தநீங்களோ"

ஓம் அப்பா, நான் முழுத்திருப்தியோடதான் இதைச்சொல்லுறன்"

ஒரு நிமிட அமைதிக்குப் பிறகு தந்தை சொல்கிறார், "சரி, உமக்கு எது சரி எனத் தெரிகிறதோ அதையே செய்யும்"

எப்ப சேரப்போறீர்"

இண்டைக்கே,.... அப்பா போட்டுவாறன்!

"போட்டுவாங்கோ"

இவைதான் அவனது வாழ்வின் மிகக் கனதியான உரையாடல். அவனது வாழ்வின் பாதையை மாற்றிய துடுப்பு விசை. அந்த நிமிடம் தான் அவனது குடும்பத்தின், வசந்தகாலத்தின் முடிவு என அவன் எண்ணிப் பார்த்திருந்திருப்பானே என்னவோ?

வீட்டில் ஒருத்தருக்கு ஒருத்தர் அவனது பிரிவின் வேதனையை வெளிக்காட்ட முடியாமல் தவித்தார்கள். நாட்கள் நகர்ந்தன, ஒரு வருடம் ஓடி மறைந்தது. ஒரு போராளியாக விடுமுறையில் வருகிறான் எடின். மகனைப் பார்த்ததும் தந்தைக்கும் தாய்க்கும் மீண்டும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. எடின் தனது சகோதரியை ஒருவாறாக சமாதானப்படுத்திவிட்டு, தனது அறைக்குள் நுழைகிறான். அவன் வைத்துவிட்டுப்போன பொருட்கள் ஒவ்வொன்றும் அப்படியே அந்தந்த இடத்தில் இருக்கின்றன, ஆனால் தூசியோ ஒட்டடையோ படராமல் அப்போதுதான் அவன் வெளியே போய் வருவதுபோல் காட்சியளிக்கிறது அறை. அவனது பெற்றோருக்கும் சகோதரிக்கும் அந்த அறைதான் மகனாகவும் தம்பியாகவும் இருந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்கிறான். கண்கள் பனிக்க வாசல் கதவில் சாய்ந்து நிற்கிற சகோதரியை பார்க்கிறான், அவள் புன்னகைத்தபடியே சொல்கிறாள் "எடின் நல்லா படுத்து தூங்கும் காலையில் சந்திப்போம்.. குட்நைட்"

கதவை சாத்திவிட்டு அறையை சுற்றிப் பார்த்தபடியே பழைய ஞாபகங்களோடு கலந்துபோகிறான். உணர்ச்சி பெருக்கோடு அவனது இரகசியங்களின் பேளையாக இருந்த அலுமாரியை திறக்கிறான் அங்கே இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. சின்ன வயசிலிருந்து அக்கா யூடித், எடினோடு சண்டைபோட்டுக்கொண்டு பிடிவாதத்தோடு பறித்து வைத்திருந்த பொருட்கள் எல்லாம் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன, அவை எடினுக்கு மிகவும் விருப்பமாயிருந்த பொருட்கள். அன்றிரவு அவனது சௌகரியமான கட்டிலில் கூட அவனால் தூங்க முடியவில்லை. நினைவுகள் முட்களாயிருந்தன, உறவுச் சிலுவையில் அன்பின் ஆணிகள் அவனை அறைந்துகொண்டிருந்தன.

அவன் விடைபெறும் நாள் வந்தது. யூடித், எடினிடம் கேட்கிறாள் "தம்பி நீர் இதில இருந்து விலகி வந்துவிடும், உமக்காக இல்லாட்டியும் அம்மா அப்பாவின் சந்தோசத்திற்காகவாவது..... எங்களுக்கு பயமா இருக்கு எடின்..."
எடின் பதில் சொல்கிறான், இல்லை அக்கா இது நானாகத் தெரிவுசெய்த பாதை, இப்ப நான் போயே ஆகவேண்டும், இதை நீங்களும் புரிந்துகொண்டேதான் ஆகவேண்டும்......
என் முழுவாழ்விற்கும் போதுமான அன்பை உங்களிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட திருப்தி எனக்கிருக்கிறது, நான் புதிய சூழலுக்கு என்னை பழக்கப் படுத்திக்கொண்டதை போல நீங்களும் நானில்லாத சூழலுக்கு உங்களை தயார்ப்படுத்தவேண்டும்" அவனது பேச்சைவிட அவன் சிரிப்பைத்தான் அதிகமாக கோபித்துக்கொண்டாள் யூடித். வார்த்தைகளால் மனங்களை வென்றுவிடுகிற சக்தியை கடவுள் உமக்கு கொடுத்திருக்கலாம், ஆனால் உமது நியாயங்கள் என்னிடம் எடுபடாது......என்று சொல்லிவிட்டு எழுந்துசெல்கிற அக்கவை பார்த்து, "பிடிவாதக்காற அக்கா" சொல்லிச் சிரிக்கிறான் எடின்.

ஆண்டுகள் கடந்தன, எடினின் குடும்பம் அவனது பிரிவால் தவிப்பதை மறந்து அவனது வரவிற்காய் காத்திருக்க தொடங்கியிருந்தது. இம்முறை அவனது வருகை புதுமாதிரியாக இருந்தது. ஒருநாள் காலை பத்திரிகை வாங்கிவந்த தந்தை அதை இரண்டுமுறை புரட்டிவிட்டு, அதை ஒரு ஒரத்திலே தூக்கிப் போட்டிருந்தார். இதை அவதானித்த யூடித் பத்திரிகையை எடுத்து என்ன செய்தியாக இருக்கும் என்று தேடுகிறாள், "எடின் யூட் என்றளைக்கப்ப்படும்.............நேரடிச் சமரில் வீரச்சாவடைந்தார்........" மீண்டும் மீண்டும் படிக்கிறாள் யூடித் " தம்பீ......" ஒலித்தடங்கியது வெறும் குரல் மட்டுமாயிருந்திருக்குமா!

அந்தச் செய்தி மிச்சமிருந்த இன்பங்களையும் பிடுங்கிக்கொண்டதன் பிறகு துயரத்தின் முழுமையான பிம்பத்தை ஒட்டிக்கொண்டது அந்த வீடு. மகன் இறந்துவிட்டான் என்ற செய்தியே அவனது தாயின் மரணத்துக்கு காரணமாகிவிடுகிறது, தந்தை நோய்வாய்ப்படுகிறார், யூடித் தனது உயர்கல்வியை பாதியிலே நிறுத்திக்கொள்கிறாள்.
இரண்டு ஆண்டுகளில் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்படுகிறது, சமாதாச் சூழல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. யூடித் தந்தையை அழைத்துக்கொண்டு எடினின் கல்லறையை பார்க்க வருகிறாள். அங்கே அவனது அணிப் போராளிகளை கண்கிறார்கள்

நாங்கள் அவரை " கண்ணாடி அண்ண " எண்டுதான் கூப்பிடுவம், நல்ல மனிதர் அவர், சண்டை நேரம் தவிர்த்து எங்களோட அவரும் ஒருஆளா தான் இருப்பார். அவரிட்ட இருந்து நாங்கள் கற்றுக்கொண்ட விடயங்கள் நிறைய, அவர் ஒரு நல்ல ஆசான். ஆனால் நாங்கள் அவரை இவ்வளவு விரைவில் இழந்துவிடுவோம் என்று நினைக்கவில்லை.
அண்டைக்கு ஆமி எங்களை சுத்திவளைச்சிட்டான், வெளியால வர இருந்த ஒரு வழியையும் நெருங்கிக்கொண்டிருந்தாங்கள். அப்பதான் கண்ணாடி அண்ண சொன்னார், நான் வாறன் நீங்கள் முதல்ல வெளியேறுங்கோ" அவரோட ஒரு பத்துப்பேர் தான் அப்ப இருந்தாங்கள், எங்கள போகச் சொல்லீட்டு அவர் வாறவனை மறிச்சு அடிக்க தயாராகீட்டார், அவர முதல்ல வெளியேறச்சொல்லி நாங்கள் எவ்வளவு கேட்டும் அவர் கேக்கேல்ல, அவற்ற கட்டளையை எங்களால மீற முடியேல்ல. அவர் சண்டையை தொடக்க நாங்கள் அந்த நேரத்தில வெளியால வந்திட்டம். அவர் அடிச்சுக்கொன்டே எங்களை நோக்கி வந்துகொண்டிருக்கேக்க ஆமீன்ர செல்லில பீஸ் பட்டு அந்த இடத்திலயே வீரச்சாவடைஞ்சிட்டார். சரியான சிரமப்பட்டுத்தான் அவற்ற உடல மீட்டுக்கொண்டுவந்தனாங்கள்." களத்தில் நடந்ததை கண்கள் கசிய சொல்லிமுடித்தான் ஒரு போராளி.

அப்போதுதான் எடின், ஐம்பது பேர் கொண்ட அணியின் தலைவனாக இருந்திருக்கிறான் என்பதே தெரிய வந்தது. அன்றைய தினம், கார்த்திகை 27., இராணுவ மரியாதையோடு அடக்கம்செய்யப்பட்ட மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஒரு நிமிடம் தீர்த்தக்கரைபோல திரண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் பேரமைதி விழுந்து சத்தங்களை எல்லாம் சிறை செய்து செல்கிறது. பின்பு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. சந்தன வாடையும் பூக்களின் புனிதமும் வீச, யூடித் றோஜாக்களால் தம்பியின் கல்லறையை அழகுசெய்துகொண்டிருந்தாள்.