Saturday, July 19, 2008

தாயின் கருவறையிலும் கண்ணீரின் கசிவு




விடியல்

அவளுக்காக காத்திருந்த
நாட்களின் நெடிதுயிர்ப்பை
மரண வாசலில்
சிந்திப்போகிறது காலம்

ஓ என்
நேசக்கரப் பாலைவனங்களே
எம் நெருப்புச் சுனையில் இருந்து
சிந்தி
நீழ்துயில் கொள்ளும்
நித்தியகல்யாணிகளே
உங்கள் கனவுகளின் கருவறை
இன்னும் காலியாகவே
இருக்கிறதா....

காத்திருப்பு
ஒரு யுகத்தை கடந்துவிட்டது
விடியலை சுவீகரிக்கும்
எங்கள் கனவுகளில்
நரம்பு துடிக்க நாருரிக்கும்
வலிகள் - போதும்

நிறுத்துங்கள்
நிறுத்துங்கள்

இன்னும் எவ்வளவு காலம்
காத்திருப்பது
இன்னும் எவ்வளவு காலம்
இழப்பது
இன்னும் எவ்வளவு
இழ இரத்தங்களை
இந்த
மண்ணுக்கிறைப்பது
இன்னும் எத்தனை
உயிர் திரித்து
இந்ததேசத்தை ஒளிர்விப்பது

போதும்
நிறுத்துங்கள்

அவள் வருகிறாளோ இல்லையோ
காத்திருக்க
நாம் மிச்சமிருப்போமா தெரியாது

எங்களுக்கான தேசத்தில்
எங்களுக்கான வானத்தில்
எங்களுக்கான சூரியன் ஒன்று
எழுகிறத்தோ இல்லையோ
காண நாமிருப்போமா தெரியாது

நிறுத்துங்கள்

எங்கள் தாயின்
கருவறையிலும் கண்ணீரின் கசிவு

போதுமப்பா
நிறுத்துங்கள்

குளந்தைகளுக்கு பெற்ரோரே உலகம். பெற்ரோரே காவல். அவர்கள் மீதான நம்பிக்கையே குளந்தைகள் ஆரோக்கியமாகவும் மகிள்ச்சியாகவும் வாளவைக்கும் மந்திரம். நம் பெற்றோர்கள் நமக்காக வாள்கிறார்கள், அவர்கள் எமக்கு ந்ல்லதைத்தான் செய்வார்கள், அவர்களை மீறி எந்தத்துயரமும் எம்மை அணுகாது என்ற நம்பிக்கை, அன்பை, பாதுகாப்பை, இன்னும் மகிள்ச்சியை ஆறுதலை குளந்தைகள் பெற்றோரிடம் உணர்வதனாலேயே பால்யப்பருவம் பூந்தோட்டமாக மகிள்ச்சியின் கூடாரமாக இருக்கிறது.

நம் தேசத்தில் இந்த இயல்பு கெட்டுக்கிடக்கிறது. அதனால் தான் "எங்கள் தாயின் கருவறைக்குள்ளூம் கண்ணீரின் கசிவு" என்று எழுதினேன்.

எப்படிச் சொல்வது இந்த இயல்பு எப்படிக் கெட்டதென்று. எங்கள் பிள்ளைகளுக்கு அன்பை தந்தோம் பாதுகாப்பை தரமுடியவில்லையே என்ற குற்றவுணர்ச்சி எங்கள் பெற்ரோர் மனங்களை எப்பொளுதோ கொன்றுபோட்டுவிட்டது. மரணத்துக்கான முற்கூட்டிய பதிவு கட்டாயமாக்கப்பட்டதிலிருந்து எம் பிள்ளைகள் சாவின் சாயத்தை முகத்தில் பூசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முகத்தில் புன்னகைத்தாலும் நெஞ்சின் நெருப்பொளிதான் அது.

" அம்மா என்னை விடச்சொல்லுங்கோ, அக்காவை கொண்டுவந்து குடுங்கோ"

"அம்மா அண்ணா பாவம் படிக்கட்டும், நான் போறன், அவனுக்குச் சொல்லாதேங்கோ கவலைப்படுவான். "

இப்படித்தான் எங்கள் குளந்தைகள் குரல், காதுவந்து சேரும். இந்தக் குரலில் இருந்து அன்பை எப்படி அளவிடுவது சொல்லுங்கள், சொல்லிக்கொண்டே சாவை சந்திக்க யாருக்குத்துணிவிருக்கிறது ஆனாலும் அன்பிற்கு, பசத்திற்கு உயிரை விலையாய் எழுதும் அதிசயமும் எங்கள்தேசத்தில் மட்டும்தான் நிகளும்.

இந்தக் குரலில் இரண்டாம் வகை என் தங்கையின் மனக்குரல் என்றால் நான் எப்படி அதிஸ்டக்காறன் என்று என்னைச் சொலிக்கொள்ள முடியும், என் மனச்சாட்சி அரித்து அரித்தே என்னைக் கொல்லுமே, இப்படி அண்ணன்கள் நிலை என்றால் அதை விட மோசம் அம்மாக்கள் நிலை. தான் பெற்ற பிள்ளையில் ஒன்றை சாவில் தள்ள, முடிவுசெய்ய வேண்டும். மகாபாரதத்தில் குந்திதேவிக்கு இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது, யாரை அரக்கனுக்கு இரையாய் கொடுப்பதென்று மனச்சஞ்சலத்திலிருந்து இறுதியாக அவள் வீமனை தெரிவுசெய்து அனுப்பியதாக கதை சொல்கிறது.இன்றைக்கு எம் தேசத்தில் அத்தனை தாய்மாரும் நிஜக் குந்திகள். வீட்டில் ஒரு குளந்தை வீமனாக்கப்படுகிறான். இது போன்ற சங்கடத்தை காலம் எம் அம்மாக்களுக்கு தந்திருக்கக்கூடாது

பாவம், அம்மாவால் என்ன சொல்லமுடியும், என்ன செய்யமுடியும், வரப்போகிற மரண அவலத்தை இப்பொளுதே சுமக்கத் தொடங்கிவிடுவாள்.இந்த உலகத்தை சபித்தபடி.
இந்த உலகம் எங்கள் கனவுகளை கொன்றுபோடுகிறது. எதை அனுபவித்தோம் நாம், துயரத்தை தவிர, எங்களிடம் வேறெந்த தடயத்தை இந்தக் காலம் விட்டுச்செல்லப்போகிறது என்கிற விரக்க்திதான் அவளை சபிக்குமளவிற்கு தூண்டியிருக்க வேண்டும். இப்படி, ஆரோக்கியமான சூழல் இல்லாத இந்தச் சமுகம், எப்படி அடுத்த தலைமுறைக்கு, புதிய நம் விடியலில் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் இன்னும் நம் இனத்தின் வாழ்வியல் விழுமியங்களையும் மட்டும் எடுத்துச் செல்லப்போகிறது, இவை இல்லாமல் பிறகெப்படி நாம் ஓர் இனமாக எஞ்சுவது. பிறகெதற்கு நாடு.

ஆக இனத்தை விடவும், நாட்டைவிடவும், குளந்தைகள் வாழ்வே பாதுகாக்கப்படவேண்டியிருக்கிறது.


ஆதலால் தான் சொல்கிறேன்
நிறுத்துங்கள்

விடியல் மீது
எனக்கு மட்டுமென்ன ஆர்வமில்லயா

நானும் இதே மண்ணில் புரண்டவன்
நானும் இதே வீதியில்
பட்டாம்பூச்சி பிடித்துத் திரிந்தவன்
என் வாலிபக் கனவுகளும் இங்கேதான்

நீங்கள் சுவாசித்த
காற்றைத்தான் நனும் சுவாசிக்கிறேன்
என் நரம்புகளிலும் எரிமலையுண்டு.
ஒலிபெருக்கி பொருத்தி
என் ஒருவனுக்குள் ஒலிக்கின்ற
குரலும்
நீங்கள் கேட்கும் அதே
சுதந்திர தாகம் தான்
எங்கள் கூட்டுக்குள் நுளைகிற
வேட்டை நாய்களை காண்கிறபோது
எனக்கும் நாடி துடிக்கிறது

ஆனாலும் அன்பர்களே
எங்கள் குளந்தைகளை
ஒருதரம்
திரும்பிப் பாருங்கள்

காய்ந்து இறுகிய அந்த முகங்களில்
சோக வடுக்களை பாருங்கள்

அவர்களின் கண்களில்
விரிகின்ற கனவுகளின்
ஏக்கத் தகிப்பை ஒருதரம்
பாருங்கள்

நீங்களும் நானும்
இழந்தது இழந்ததுதான்

அவர்களாவது வாழட்டும்
அவர்களாவது கொஞ்சம் சிரிக்கட்டும்

நீங்களும் நானும்
இழந்தது இழந்ததுதான்

Friday, July 11, 2008

அணைந்துவிட்ட புன்னகை




காயத்திரி

நீ என்னோடு பேசிய வார்த்தைகள்
அவ்வளவு இருக்காது
ஆனால் உன்னிடம் நான்
சேகரித்த புன்னகைகள்
அதிகம்

அழகு என்றவார்த்தைக்கு
அர்த்தம் கொடுக்கும்
அழகு நீ

அறிவிக்கப்படாத
எம் ஊரின்
எம் பள்ளியின்
எங்கள் வகுப்பறையின்
அழகி நீ

கானமிசைத்தபடி
காற்றில் உன்
விரல்களின் நடனத்தை
கண்டு மயங்காத
காளைகள் கிடையாது
நம் தெருவில்

சித்திரா, யானகி அம்மா, பவதாரணி
இவர்களுக்குப் பிறகு
நான் ரசித்தது
உன் குரலைத்தான்

ஆனால் எங்கே நீ பாடினாய்....

வெட்கம் நிரப்பிவைத்த
பூங்குவளை நீ
கொங்சம் உறுக்கினால்
குழைந்து அழுதுவிடுவாய்

நீண்ட கருங்கூந்தல்
குண்டுக் கருவிழி நிலவுகள்
மெல்லிடை
அன்ன நடை
எல்லாம் அளவோடு கொடுத்திருந்தான்
ஆண்டவன்
அளவுக்கு அதிகமாகவே
அழகாயிருந்தாய் நீ

அரை வழியில்
அத்தனையும்
சேர்த்துப் பறித்துப்போய்விட்டான்
அவன்

அத்தனையையும் விட
உன் அமைதியும்
வார்த்தைகளுக்கு பதிலாக
நீ பரிமாறும் புன்னகைகளுமே
அழகு

இன்னொருமுறை
உயிர்த்தெழுந்த மோனலீசாக்கள்
உன் புன்னகைகள்

அத்தனையையும் விட
இருதயத்தில் இன்னும்
இறுக்குகின்ற நம் நட்பே அழகு


எம் கல்லூரியில்
எம் வகுப்பிலிருந்து
அணைந்துவிட்ட இன்னொரு
புன்னகை நீ

எம் தோழிகளில்
உதிர்ந்துவிட்ட
முதல் பெண் பூ நீ

தூங்கு சிநேகிதியே தூங்கு

விடியல்களில்லாத ஒரு
இரவினில்
கல்லறைத் தொட்டிலில்
கண்மூடித் தூங்கு நீ

காலமோ கடவுளோ
வந்து தட்டி
எலுப்புகிறார்களோ இல்லையோ
மனிதர்கள் உன்னை கிளறி எடுக்காதவரை
நீ நேசித்த
பூமியின் மடிமீது
தலை சாய்த்து தூங்கு நீ


உன் நினைவுகளை
தாங்கி நிற்கிறோம்
அமைதியாய் தூங்கு நீ

மெல்லினத் தமிழில் வல்லின வள்ளுவன்

வாங்க, என்ன வள்ளுவனையே வம்புக்கு இழுக்க வந்திட்டானா என்றா பார்க்கிறீங்களா, இன்றைக்கு வள்ளுவன் இருந்திருந்தால் எப்படி ஈரடி எழுதுவான் என்று ஒரு கற்பனை கதவு திறந்தது எனக்குள்ளே. வாசுகிகளே மன்னித்துக்கொள்ளுங்கள்....
தலைப்புகளை பார்த்து தலை தெறிக்க ஓடுறாங்க அதனாலதான் இப்படி எழுதினேன்

உலகம்

தாய்க்குருவி அனாதையாய் விட்டுப்போன
உயிர்க் குருவிகளின் கூடு

முஸ்லீம் பெண்கள்

முக்காடு போட்ட
முழு நிலவுகள்

தமிழ் பெண்கள்

நெற்றியில் திலகமிட்ட
நிறை மலர்கள்


வருவேன்

Saturday, June 28, 2008

வழியில்....

மீண்டும் வருகிறோம்

நீங்கள் வாருங்கள்! என்று
வரவேற்கப் போவதில்லை
என்பது தெரியும்
எங்களின் வரவு குறித்து
நீங்கள் மகிளாது போனாலும்
வெறுப்பையாவது
காட்டாதிருப்பீர்களா?....
என்பதுதான்
எங்களின் எதிர்பார்ப்பு

இதென்ன கேள்வி
அடித்துத் துரத்தப்பட்டவர்கள்
நாங்கள்
விடுமுறைக்கு சென்று வரவில்லை
வஞ்சகம் தீர்க்கப்பட்டவர்கள்
நாங்கள்
வாக்கப்பட்டு ( வாழ்க்கை பெற்ரு )
போகவில்லை
துரத்தியவனையே தேடி
வந்திருக்கிறோம்
அடிமையாக்கப்பட சமமதித்துக்கொண்டு

கருணையாவது கழிவிரக்கமாவது
கடைசிவரை கிடையாது
நமது மன்றாட்டங்களுக்கு மடிப்பிச்சை

வேறு வழியின்றி
வந்த்திறுக்கிறோம்

சுற்றிவரக் கடல்
ஒரு சிறங்கை நிலம்
அதற்குள் எங்குதான் ஓடி ஒழிவது
அதனால் எங்களை நாங்களே
காட்டிக் கொடுக்கிறோம்
இதோ நாம் என்று

இன்னொருமுறை
அவனுக்கு கொலைவெறி
எடுக்கிறபோது
இரத்த தாகத்தை
தீர்த்துக்கொள் என்றுத்தான்
எங்களைத் தருகிறோம்

அதுவரை எங்களை கொஞ்சம்
ஓரமாக இருக்கவிடு

சம்மதித்துவிட்டாய்
நீ சம்மதித்துவிட்டாய்
அரை மனமுமில்லை
கால் மனமுமில்லை
மனமேயில்லாமல் சம்மதிதுவட்டாய்

கோபம் வருகிறபோது
அடித்துத் துவைக்க
ஒரு கந்த்ல் கிடைத்திருக்கிறது
என்பத்ற்காக
சம்மதித்துவிட்டாய்

எப்படியோ
மீண்டும் வருகிரோம் நாங்கள்

கொலை செய்யப்பட்ட
எங்கள் புன்னகைகளையும்
தெருவழியே அவன்
அடிக்கடி
எம்மைக் கிழறிச் சோதனை செய்த
வலிகளையும்
தூக்கித் தோழ்மீது
சுமந்துகொண்டு வருகிறோம்

நாங்கள் யார் என்று
உங்களுக்காவது தெரிகிறதா
எதைத் தவறவிட்டாலும்
அடையாளங்களை மட்டும்
நாங்கள் மறப்பதில்லை

இதோ பாருங்கள்

வெய்யில் எங்கள் மேனியில்
எழுதிய கறுப்பு

செடிகள் எம் சோகம்
கண்டு
பூப்பூக்க மறுத்தாலும்
நிறுத்தாது
விழிகளில் பூக்கும்
கண்ணீர் மழலை முகங்களே
பொதுவான எங்கள் அடையாளம்

நெற்றியில் திலகமிட்ட
எம் அன்னையின் நாவில்
அமுது பொங்கும் தமிழே
எங்களின்
அடையாளம்

ஒரு யுகமாக
விடியாத வானத்தின் கீழ்
அடையுண்ட
ஈழ்த்தின் துயரம்
நாங்கள்

இதுவே எங்கள்
அடையாளம்

நீங்களும் பாருங்கள்

அவர்களுக்குத்தான்
எத்தனை முறை காட்டினாலும்
புரியவில்லை
தூக்கிப்போய் சிறயில் அடைக்கிறார்கள்
நிரூபிக்கப்படாத அடையாளங்களாம் நாம்

மீண்டும் வருகிறோம்

சிறயிலிருந்து

பல்களைக்களகத்திலிருந்து
துரத்தப்பட்டு
கலக்கப்பட்டு
சந்தேகத்தில் பிடிக்கப்பட்ட
தமிழ் மாணவர்கள்
விடுதலையாகி வருகிறோம்

உடமைகள் இழ்ந்து
வெறும் கையோடு...
மீண்டும் கனவுகள்
சேகரிக்கத் தயாராகிவிட்டோம்

எங்களைப் பார்த்து
வருத்தப்படுறீங்களா
நீங்க வேற....
இது எங்களுக்கு பளகிவிட்டது

உள்ளே நடந்தது சொல்ல
இப்ப நேரமில்லை
சொல்லச் சொல்ல
தீராது

வாசலை பூட்டிவிடுவார்கள்
அத்ற்குள் செல்லவேண்டும்

எந்தவாசலா!

றோட்டு வாசல்

அது உப்பிடித்தான்
பாதுகாப்பு என்று சொல்லி றோட்டை
மறிச்சு கதவு போட்டிருக்கிறார்கள்
பூட்டமுதல் போகவேணும்

வழியில் சந்தித்தோம்
வீட்ட வாங்கோ
நிறய பேசலாம்
வீடு இரவல் வீடுடுதான்
அகதிக்கு பிறகென்ன
அடுக்கு மாடியா வாசம்

போட்டுவாறன்

Monday, April 7, 2008

சகாரவின் புன்னகை

ஒரு மாலைப் பொழுதின்
மழை நனைத்த
நினைவுகள்
மூச்சுக்காற்றின்
உஸ்ணத்தில் காய்கின்றன
நிலவு
துண்டுகளாய் உடைந்து
சிந்திய முத்தங்களில்
மிதக்கிறது எனது புன்னகை…
மனசின்
அலைகளின் உதைப்பில்
கரையொதுங்கிய கனவு
சிறங்கை உணர்வைத் தாங்கி
எப்படியோ உயிர்த்துவிட்டதில்
வானம் முழுக்க
அதன் வர்ணங்களை
கிறுக்குகிறேன்
ஒளி தீர்ந்துபோன
இரவொன்றின் உடலுக்குள்
இட்டு நிரப்பமுடியாத
நிலவின் காட்சி
கிளறப்பட்டுக் கிடக்கிறது
விழிகளை விழிகளேவிழுங்கிக்கொண்டு...

என்றைக்கோ
நடைபழகி மறந்துபோன
முட்களின் தெருவில்
தெரிந்துகொண்டே
குதித்து ஓடுகிறது
நெஞ்சுக்குள்ளே இருந்து – ஒரு
குழந்தை.

எப்பொழுதோ
வலித்து ஆறிவிட்ட
எனது காயங்களிலிருந்து
இரத்தம் பீறிட
மீண்டும் எனது புன்னகையை
எழுத ஆரம்பிக்கிறேன் - என்
இரத்தத்தில் மையெடுத்து…